Thursday, October 1, 2009

தன்மானப் தமிழர்களே! தீபாவளி நமது விழாவா?


பொதுவாக விழாக்கள் கொண்டாடுவது மக்கள் பழக்கம். தமிழர்கள் மட்டும் விதிவிலக்கல்ல. எனில் தீபாவளியைக் கொண்டாடுவதை ஏன் ஏதிர்க்க வேண்டும்?





முதலில் தீபாவளி குறித்துத் தெளிவடைவோம். நரகாசுரன் எனும் அசுரர் கொடுமைகள் செய்ததால், கண்ணன் அவரைக் கொன்றுவிட்டதாகவும், இறக்கும்தருவாயில் திருந்திய நரகாசுரன் தனது இறப்பு நாளை மக்கள் கொண்டாடக் கேட்டுக்கொண்டதாகவும், அதுவே தீபாவளி என்றும் கூறப்படுகிரது.







அசுரர் என்பவர் யார்? சூரன் என்றால் குடிகாரன் என்று பொருள். அசுரன் என்றால் குடியை வெறுப்பவன் என்று பொருள். குடிப்பதை வெறுத்து நாகரீக வாழ்க்கை வாழ்ந்துவந்த பழந்தமிழர்கள் மீது, வந்தேறிகளான ஆரியக் கூட்டம் படையடுப்பு நடத்தியது. வாழ்ந்துவந்த பகுதிகளைப் பறித்துக்கொண்டது மட்டும்மில்லாமல் பண்பாட்டு ரீதியாகவும், தாழ்ந்த அரசன் என்றும் (குடியை வெறுப்பவன் இழிவானவனாம்), கோரமான உருவத்தை சித்தரித்து (தலையில் கொம்பும், வாயிக்கு வெளியே பல்லும் நாக்கும் இருப்பதாக), கொடுமைகள் செய்பவனாக இட்டுக்கட்டியும் தங்களை மேலானவர்களாக காட்டிக்கொண்டும் ஏற்படுத்திய விழாதான் "தீபாவளி". பார்ப்பனக் கருத்தினைப் பரப்பும் செய்தியேடுகளும் தீபாவளியினால் பெருத்த இலாபம் காணும் முதலாளிகளும் வணிகர்களும் தீபாவளியைத் தொடர்ந்து கொண்டாட தூண்டுகின்றனர்.







நம்மை இழிமக்களாக மூன்றாதார குடிகளாக வேசி மக்களாக சூத்திரர்களாக இழித்துரைத்த பார்ப்பனப் புளுகுப் புராணக் குப்பையில் கூறப்பட்டத்தை நாமும் ஏற்றுக்கொண்டு, தீபாவளி விழாவைக் கொண்டாடுவது, நாம் மனிதர்களாக இல்லை என்பதை ஒப்புக்கொள்வதற்குச் சமம்.




ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நாகரீக செழுமை வாழ்வு வாழ்ந்த நாம் பார்ப்பன கருத்தியலுக்கு ஆட்பட்டிருப்பதா?




நமக்கான விழாக்கள் இல்லையா?




ஏன்னில்லை? இயற்கையை, உழவைப் போற்றும் வகையில் தமிழர் திருநாளான பொங்கல் விழாவையே தமிழர்கள் கொண்டாட வேண்டும்.




குறைந்தபட்சம் இவ்வருடத்திலிருந்து நமக்குநாமே தீபாவளியை புறக்கணிக்க முடிவெடுப்போம் ..........

6 comments:

நாமக்கல் சிபி said...

அப்பாடா! இன்னும் இந்த டாபிக்கை யாரும் ஆரம்பிக்கலையேன்னு பார்த்தேன்!

ஒரு நாள் லீவு கிடைக்கிறது உங்களுக்கு போறலையா!

நாமக்கல் சிபி said...

//வாழ்ந்துவந்த பகுதிகளைப் பறித்துக்கொண்டது மட்டும்மில்லாமல் பண்பாட்டு ரீதியாகவும், தாழ்ந்த அரசன் என்றும் (குடியை வெறுப்பவன் இழிவானவனாம்), //

சொல்றனேன்னு தப்பா நினைக்காதீங்க! இந்த லாஜிக் அநியாயத்துக்கு உதைக்குது!

அரசு சாராயத்தை பாக்கெட்ல ஊத்தி வித்ததும் ஒரு திராவிடத் தமழனோட அரசுதானே! அவருதானே பொங்கல் விழாவை தமிழ்ப் புத்தாண்டாவும் கொண்டாடச் சொன்னவரு!

நாமக்கல் சிபி said...

//தீபாவளியினால் பெருத்த இலாபம் காணும் முதலாளிகளும் வணிகர்களும் தீபாவளியைத் தொடர்ந்து கொண்டாட தூண்டுகின்றனர். //

இது என்னவோ 100க்கு 100 % உண்மை!

இதே மாதிரிதான் (சில வருடங்களா) புதுசா கெளம்பியிருக்குற அக்ஷய திரிதியையும்

மானுட கலை said...

உங்கள் முதல் மறுமொழிக்கு நன்றி

மானுட கலை said...

கருணாநிதியை சற்று கூர்மையாக பாருங்கள், அவருடைய அரசியல், பண்பாட்டுச் சிந்தனையில் ஆரியப் பூனூல் தவழுவதை !.....

கருணாநிதிக்கு தமிழ் வெறும் முகமுடி தான், மற்றபடி ஜெ செய்யும் அரசியலை தான் தொடர்கிறார். (அரசியல், பண்பாட்டு அரங்கிலும் ......)

ஊர்சுற்றி said...

தீபாவளியெல்லாம் நானு கொண்டாடறது இல்லீங்கோ!

Post a Comment